Thursday, March 01, 2012

அதென்னங்க நிலவுக்கும் பொண்ணுக்கும் அப்படி ஒரு சம்பந்தம்

அதுஎன்ன எப்பபாத்தாலும் நிலாவையும் பெண்ணையும்  ஒப்பிடபடுகிரார்கள்???

ஏன் வானத்துல சூரியன், நட்சத்திரம் எல்லாம் தான் இருக்கு!!!
அது என்ன நிலாவுக்கும் பொண்ணுக்கும் அப்படி ஒரு சம்பந்தம்??

என் பெண்ணை சூரியனோடு ஒப்பிடகூடாதா???

நிலா தேயும்... அழியும்!!

ஆமா பொன்னும் அப்படித்தானே..ஒரு சில காரணங்களிளால் சில சமயங்களில் அமாவசையாய் மறைந்தாலும் அழிந்தாலும்... திரும்பவும் பௌர்ணமியாய் வருவாள்.. அதிக வெளிச்சத்தோடு!!!

ஹ்ம்ம்... வேற மாதிரி சொலலும்ன.. சூரியன் அதாவது வெளிச்சம் இருந்த நிலா கண்ணனுக்கு தெரியாது. தன்னால வெளிச்சம் தரமுடியலனாலும் பகல்ல கூட நிலா எப்பவும் இருக்கும்.. இத தான் பெண்மை நு சொல்லுவாங்க!!!

இன்னும் கொஞ்சம் வேற மாதிரி சொல்லலும்னா, ஒரு பொண்ணு எப்பவும் கோவப்பட கூடாது.. காலை முழுவதும் சூரியன் சுட்டேரிச்சலும், நிலா என்பவள் இரவு மௌனமாகவும் குலுர்ச்சி தர கூடுயவலகவும் தான் இருக்கணும் சொல்றமாதிரி இருக்கு...

நிறையபேர் என்கிட்ட சொல்லுறது குடும்பப்பொண்ணு மாதிரி நடந்துக்கோ...

அதென்ன "குடும்பப்பொண்ணு"??? என்ன குடும்பப்பையன் மாதிரி நடந்துகொனு பசங்களா சொல்ல மாட்ரங்க???

இதுல பொண்ணுன அப்படி இருக்ககூடாது இப்படி இருக்ககூடாது, அடக்கஒடுக்கமா தான் நடந்துக்கணும் நு ஆயிரத்தெட்டு rules வேற....

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போல் தைரியமும் ஒரு குணம்.. ஒரு குணத்தை மறைச்ச தான் இன்னொரு குணத்தை காட்ட முடியும்னு சொல்றது தான் என்னால் ஒத்துக் கொள்ள முடியல...இத வெளிய சொன்ன நம்பள லூசுன்னு நிறைய பேர் சொல்றங்க பா!!! அதனால ஒரு சின்ன அறிவிப்பு: இது என்னுடைய கருத்து மட்டுமே...

ஆச்சோ.. எதோ எழுந்த நினைச்சு, வேற எதோ பத்தி எழுதிட்டு இருக்கேன்...

சரி சரி... எங்களை இதுவரை நிலவோடு ஒப்பிட்டது போதும்.. ரொம்ப bore அடிச்சிடுச்சு... இனிமேலாவது எங்களை சூரியனோடு ஓப்பிட்டு எழுதுங்கப்பா...

No comments: